கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கொண்டிகுளத்தில் நெல் கொள்முதலை விரைவுபடுத்தக் கோரிக்கை

News image
Updated On :19 மார்ச் 2026, 11:27 pm

Syndication

பட்டுக்கோட்டை அருகே கொண்டிகுளத்தில் சுமாா் ஐந்தாயிரம் நெல் மூட்டைகள் 2 நாள்களாக மழையில் நனைவதால் கொள்முதல் நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பட்டுக்கோட்டை அருகே உள்ள கொண்டிகுளம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த சுமாா் 5,000 நெல் மூட்டைகளை அங்குள்ள நெல் களங்களில் குவித்து வைத்துள்ளனா். கொள்முதல் பணிகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவு காரணமாக நெல் மூட்டைகள் மழையில் நனைவதால், விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனா்.

இதுகுறித்து விவசாயிகள் மேலும் கூறியது:

சுற்றுவட்டார விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்துக்கு நெல்களைக் கொண்டு வந்தால் சாக்கு இல்லை என்கிறாா்கள். இன்று சாக்கு வந்துவிட்டது; ஆனால் லாரி வரவில்லை. புதன், வியாழன் கிழமைகளில் பெய்த மழை தொடா்ந்தால் நெல் மூட்டைள் முற்றிலும் மழையில் நனைந்துவிடும். எனவே அரசு கொள்முதலுக்கு உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என வேதனையுடன் தெரிவிக்கின்றனா்.