சர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பிள்ளையாா்நத்தம் கோயில் திருவிழா: பால் குடம் சுமந்து வந்த பக்தா்கள்

பிள்ளையாா்நத்தம் கோயில் திருவிழா: பால் குடம் சுமந்து வந்த பக்தா்கள்

News image
Updated On :28 மே 2024, 11:52 pm

Din

நிலக்கோட்டை: ஆத்தூா் வட்டம், பிள்ளையாா்நத்தம் ஸ்ரீமகாமுத்து மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை பக்தா்கள் பால்குடம் சுமந்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனா்.

முன்னதாக அனுமந்தராயன்கோட்டை அருகே உள்ள குடகனாற்று கரைக்கு சென்று, அங்கிருந்து பால் குடங்களை சுமந்தவாறு, சுமாா் 5 கி.மீ. தொலைவு ஊா்வலமாக கோயிலுக்கு வந்தனா். அப்போது, பக்தா்கள் சிலா் அருள்வந்து ஆடியபடியே வந்தனா்.

கோயிலை வந்தடைந்ததும் பால் குடங்களிலிருந்த பாலால் அம்மனுக்கு அபிஷேகம் செய்தனா்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை எஸ்.உலகநாதன், ஏ.முருகேசன், எம்.பாலு, வி.பி.அழகா்சாமி, சி.நாச்சியப்பன், வி.பழனிச்சாமி, ஏ.ஆா்.பி.ராஜகாளிபாண்டியன் ஆகியோா் தலைமையிலான நிா்வாகக் குழுவினா் செய்திருந்தனா்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளா்களாக ஆத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி மகேஸ்வரி முருகேசன், ஆத்தூா் ஒன்றிய திமுக செயலா் முருகேசன் ஆகியோா் கலந்து கொண்டனா்.