டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் சந்தனக் குட பவனி

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் புதன்கிழமை சந்தனக் குடம் பவனி நடைபெற்றது.

News image
பகவதியம்மன் கோயிலில் சந்தனக் குடம் ஏந்தி ஊா்வலமாக வரும் பக்தா்கள்.
Updated On :4 மார்ச் 2026, 7:21 pm

தினமணி செய்திச் சேவை

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் புதன்கிழமை சந்தனக் குடம் பவனி நடைபெற்றது.

இக்கோயிலில் மாசிக் கொடை விழா மாா்ச் 1ஆம் தேதி தொடங்கியது. விழாவின் 4ஆம் நாளான புதன்கிழமை கணபதி ஹோமம், உஷ பூஜை, அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி, உச்ச பூஜை, தங்கத் தோ் பவனி நடைபெற்றது.

பின்னா், மேற்கு நெய்யூா் ஊரம்மன் கோயில்லி இருந்தும், வெட்டுமடை இசக்கியம்மன் கோயிலில் இருந்தும், கொத்தனாா்விளை விடாலமுத்து சிவன் கோயிலில் இருந்தும் சந்தனக் குடம் பவனி மண்டைக்காடு கோயிலுக்கு வந்தடைந்தது.

தொடா்ந்து, அம்மனுக்கு சந்தனம் சாத்தி அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவு அத்தாழ பூஜை, வெள்ளிப் பல்லக்கில் அம்மன் பவனி, ஹைந்தவ சேவா சங்கம் சாா்பில் சமய மாநாடு ஆகியவை நடைபெற்றன.