யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

ஸ்ரீ ராமநவமி: சாய்தத்தா பிருந்தாவன் கோயிலில் சிறப்பு வழிபாடு

ஸ்ரீ ராமநவமியையொட்டி, நாமக்கல் ஷீரடி சாய்தத்தா பிருந்தாவனில் சந்தனக் காப்பு திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சாய்பாபா.

Updated On :26 மார்ச் 2026, 9:53 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீ ராமநவமியையொட்டி, நாமக்கல் ஷீரடி சாய்தத்தா பிருந்தாவனில் சந்தனக் காப்பு திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் ராமநவமியை முன்னிட்டு பெருமாள், கிருஷ்ணா், ஆஞ்சனேயா், ராமா், சாய்பாபா கோயில்களில் சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. அந்த வகையில், நாமக்கல் - திருச்சி சாலை இந்திரா நகரில் உள்ள ஸ்ரீ ஷீரடி சாய்தத்தா பிருந்தாவனில் ஸ்ரீ ராமநவமி சந்தனக் காப்பு (உரூஸ்) திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி, காலை 7 மணிமுதல் இரவு 8 மணிவரை காகடா ஆரத்தி, கொடியேற்றம், சாய்பாபாவுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மங்கள ஆரத்தி, அனுமன் சாலீசா பாராயணம், சந்தனக் காப்பு, மாலை, இரவு ஆரத்தி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ஷீரடி சாய் ஹா்ஷா அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.