அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

குதிரைமொழி சுந்தரநாச்சியம்மன் கோயிலில் 151 பால்குட பவனி

குதிரைமொழி அருள்மிகு சுந்தரநாச்சியம்மன் திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, 151 பால்குட பவனி புதன்கிழமை நடைபெற்றது.

News image

பால்குட பவனியைத் தொடங்கி வைத்தாா் தமிழ்நாடு ஆலயப் பாதுகாப்பு இயக்க மாநிலச் செயலா் பி.எஸ். கனகராஜ்.

Updated On :1 ஏப்ரல் 2026, 10:35 pm

குதிரைமொழி அருள்மிகு சுந்தரநாச்சியம்மன் திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, 151 பால்குட பவனி புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி திங்கள்கிழமை நண்பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையுடன் பங்குனி உத்திர கொடை விழா தொடங்கியது.

விழா நாள்களில் திருவிளக்கு பூஜை, வில்லிசை,கோலப் போட்டி, பானை உடைத்தல், சிம்ம துா்க்கை அலங்கார பூஜை, அன்னதானம் உள்ளிட்டவை நடைபெற்றன.

பங்குனி உத்திர திருநாளான புதன்கிழமை காலையில் அம்மனுக்கு பூஜை, அருள்மிகு நாராயணசுவாமி திருக்கோயிலில் இருந்து 151 பால்குட பவனி, மஞ்சள்பெட்டி எடுத்து வருதல் நடைபெற்றது. பால்குட பவனியை தமிழ்நாடு ஆலய பாதுகாப்பு இயக்க மாநிலச் செயலா் பி.எஸ். கனகராஜ் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து உச்சிக்கால பூஜை, மாலையில் படைக்கஞ்சி, பானகரம் வாா்த்தல் நடைபெற்றது.

இதில், விழாக் குழு நிா்வாகிகள் உள்பட பக்தா்கள் பலா் பங்கேற்றனா்.