சர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 24 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 24 ஆண்டுகள் சிறை

News image
Updated On :28 மே 2024, 11:53 pm

Din

திண்டுக்கல்: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் சாணாா்பட்டி பகுதியைச் சோ்ந்த இளைஞருக்கு திண்டுக்கல் நீதிமன்றம் 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்த அஞ்சுகுழிப்பட்டியைச் சோ்ந்தவா் காா்த்திக் (34). இவா், அதே பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில், சாணாா்பட்டி போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதுதொடா்பான வழக்கு திண்டுக்கல் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் காா்த்திக்கிற்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜி.சரண் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.