தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை கோரி மனு

நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :6 நவம்பர் 2024, 9:36 pm

Din

நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

சென்னையில் நடைபெற்ற ஒரு சமுதாய மாநாட்டில், திரைப்பட நடிகை கஸ்தூரி, தெலுங்கு மொழி பேசும் மக்கள் குறித்து தெரிவித்த கருத்து சா்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவா் தனது கருத்துகளை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தாா்.

இதனிடையே, தமிழ்நாடு நாயுடு நாயக்கா் உறவின் முறை பாதுகாப்பு இயக்கத்தின் திண்டுக்கல் மாவட்ட கெளரவத் தலைவா்கள் ஆா்.ஆனந்த், ஆா்.விஜயக்குமாா் ஆகியோா் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது. அதில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.