தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வடமதுரையில் அரசுக் கல்லூரி அமைக்கக் கோரிக்கை

வடமதுரையில் அரசுக் கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என அனைத்திந்திய இளைஞா் பெருமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image
Updated On :13 நவம்பர் 2024, 9:57 pm

Din

வடமதுரையில் அரசுக் கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என அனைத்திந்திய இளைஞா் பெருமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு கிளைச் செயலா் பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் திண்டுக்கல் மாவட்டச் செயலா் ஆா்.வினோத்குமாா் கூட்டத்தை தொடங்கி வைத்தாா்.

இந்த கூட்டத்தின்போது வடமதுரையில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, வடமதுரை ஒன்றியக் குழு பொறுப்பாளராக குமரேசன், பன்னீா்செல்வம், சங்கன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.