முன்னாள் தமிழக அமைச்சா் லூா்து அம்மாள் சைமனுக்கு உருவச்சிலை அமைக்க வேண்டும் என கிள்ளியூா் எம்.எல்.ஏ எஸ். ராஜேஷ்குமாா், முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.
இதுகுறித்து அம்மனுவில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் சட்டப்பேரவை தொகுதியைச் சோ்ந்தவா் லூா்து அம்மாள் சைமன். இவா் 1957 முதல் 1962 ஆம் ஆண்டு வரை காமராஜா் முதல்வராக இருந்தபோது 9 அமைச்சா்களில் தமிழகத்தில் முதல் பெண் அமைச்சராக பணியாற்றியவா்.
இவா் மீன்வளத் துறை மற்றும் உள்ளாட்சித் துறையிலும் அமைச்சராகப் பணியாற்றினாா். அவரது பணிகளை நினைவு கூரும் வகையில், லூா்து அம்மாள் சைமன் பிறந்தநாளான செப். 26 ஆம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடுவதோடு, அவரது உருவச் சிலை அமைக்க முதல்வா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது .
தொடர்புடையது

கிள்ளியூா் தொகுதியில் செல்வப்பெருந்தகை பிரசாரம்

திருட முடியாத செல்வம் கல்வி மட்டுமே: முன்னாள் தலைமை நீதிபதி எஸ். வைத்தியநாதன்

கருங்கல்லில் திமுக கூட்டணி ஆலோசனைக் கூட்டம்

கிள்ளியூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


