தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கக் கோரி போராட்டம்

சேலம் நெய்க்காரப்பட்டி பகுதியில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கக் கோரி, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

News image

சுரங்கப் பாதை அமைக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

Updated On :19 மார்ச் 2026, 5:04 am IST

சேலம் நெய்க்காரப்பட்டி பகுதியில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கக் கோரி, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

சேலம் நெய்க்காரப்பட்டியில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. நெய்க்காரப்பட்டியில் இருந்து மலங்காடு பகுதிக்கு செல்ல சேலம் - ஈரோடு ரயில்பாதையைக் கடக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்காக அப்பகுதியில் ஏற்கெனவே உள்ள குறுகலான தரைவழி பாலத்தில் இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ மட்டுமே செல்ல முடியும்

இந்நிலையில், ரயில் பாதையில் உலவும் கால்நடைகள் விபத்தில் சிக்குவதை தடுக்கும் வகையில், பாதையில் தடுப்பு ஏற்படுத்த உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதைக் கண்டித்தும், ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, அங்கு வந்த அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து, அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மலங்காடு பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். தற்போதுள்ள தரைவழி பாலம் வழியாக மலங்காடு நடுநிலைப் பள்ளி, நியாயவிலைக் கடை, ஆவின் பாலகம், அங்கன்வாடி மையம், ஆரம்ப சுகாதார நிலையம், விவசாயிகள், தொழிலாளா்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகிறோம். தற்போது ரயில்வே துறை இருபுறமும் இரும்பு தடுப்பு வேலி அமைப்பதாக கூறியுள்ளது.

இதனால், எங்களின் அன்றாடத் தேவைகளுக்கு சென்றுவர வேறு பாதை இல்லை. ரயில்வே பாதையைக் கடக்க சுரங்கப் பாதை அமைத்து தரவேண்டும் என வலியுறுத்தி அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உடனடியாக சுரங்கப் பாதை அமைக்க வலியுறுத்தி தோ்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனா்.