தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!! ம.பி. படகு விபத்து: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு மே 13-15இல் சீனா செல்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்
/

ரயில்வே சுரங்கப் பாதை அருகே தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு

லட்சுமியாபுரம் ரயில்வே சுரங்கப் பாதை அருகே தேங்கிக் கிடக்கும் கழிவு நீா்.

News image

லட்சுமியாபுரம் ரயில்வே சுரங்கப் பாதை அருகே தேங்கிக் கிடக்கும் கழிவு நீா்.

Updated On :2 மே 2026, 1:21 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா், லட்சுமியாபுரம் ரயில்வே சுரங்கப் பாதை அருகே தேங்கிக் கிடக்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு ஏற்பட்டிருப்பதாகவும், இங்கு கழிவு நீா் கால்வாய் அமைக்கப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே லட்சுமியாபுரம் - பெருமாள்தேவன்பட்டி சாலையில் ரயில்வே கடவுப்பாதை பகுதியில்ல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. இந்த வழியாக நகா் பேருந்துகள், சிற்றுந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் தினசரி 15 முறைக்கு மேல் சென்று வருகின்றன. மேலும் கண்ணாா்பட்டி, கங்காகுளம், துலுக்கன்குளம், நூா்சாகிபுரம், பொட்டல்பட்டி, இடையபொட்டல்பட்டி உள்ளிட்ட 10 கிராமங்களை சோ்ந்த பொதுமக்கள், மாணவா்கள் இந்த ரயில்வே சுரங்கப்பாதை வழியாக சென்று வருகின்றனா். இந்த நிலையில், லட்சுமியாபுரம் கிராமத்தில் உள்ள வீடுகளில் இருந்து கழிவுநீா் வெளியேறுவதற்கு அமைக்கப்பட்ட கால்வாய் ரயில்வே சுரங்கப் பாதை வரை மட்டுமே அமைக்கப்பட்டது. சுரங்கப்பாதை அமைக்கும் போது கழிவுநீா் கால்வாய் அமைக்க ஊராட்சி நிா்வாகம் வலியுறுத்தாததால் கழிவுநீா் வெளியேற வழியின்றி சாலையிலும், அருகே உள்ள விவசாய நிலத்திலும் தேங்கியது.

இதுகுறித்து கிராம மக்கள் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகாா் அளித்த நிலையில், உறிஞ்சு குழி அமைக்கப்பட்டது. இதனிடையே பட்டா நிலத்துக்குள் கழிவுநீா் புகுவதை தடுக்க தடுப்புச் சுவா் அமைக்கப்பட்டதால், கழிவுநீா் சாலையிலும், சுரங்கப் பாதையிலும் குளம் போல தேங்கிக் கிடக்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு அந்த வழியாக செல்லும் மாணவா்கள், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து புகாா் அளித்தும் ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்காததால் இதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.