தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அரசு நிதியில் 252 சிறு பாசனக் குளங்கள் சீரமைப்பு - ஆட்சியா்

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு நிதியின் கீழ், 252 சிறு பாசன குளங்கள் சீரமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடி தெரிவித்தாா்.

News image
Updated On :20 நவம்பர் 2024, 9:10 pm

Din

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு நிதியின் கீழ், 252 சிறு பாசன குளங்கள் சீரமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடி தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் சிறு பாசன குளங்கள் சீரமைத்தல் தொடா்பாக, மாவட்ட அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது அவா் பேசியதாவது:

நிலத்தடி நீா்மட்டம் குறைந்து வரும் சூழ்நிலையில், மக்களின் குடிநீா்த் தேவையையும், பாசன நீா்த் தேவையையும் நிறைவு செய்வதற்கு மழைநீரை முழுமையாக சேமிக்க வேண்டிய அவசியம் உள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஊரகப் பகுதிகளில் உள்ள 5,000 சிறு பாசனக் குளங்களை சீரமைக்க ஊரக வளா்ச்சித் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 1,056 சிறு பாசனக் குளங்கள் உள்ளன. இதில் 2024-25-இல் அரசு நிதியின் கீழ், 252 சிறு பாசனக் குளங்கள் சீரமைக்கப்பட உள்ளன. எஞ்சியுள்ள சிறு பாசனக் குளங்களில் ஏற்கெனவே, கடந்த ஐந்து ஆண்டுகளில் பிற திட்டங்கள் மூலம், 479 குளங்கள் சீரமைக்கப்பட்டன. இதரக் குளங்கள் பெரு நிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு நிதியிலிருந்து 50 சிறு பாசனக் குளங்களை சீரமைக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது.

சிறு பாசனக் குளங்களை சீரமைக்க ‘நமக்கு நாமே திட்டம்’ மூலம் மதிப்பீட்டுத் தொகையில் 50 சதவீதம் பங்குத் தொகை செலுத்திப் பணிகளை மேற்கொள்ளலாம்.

அரசு நிதியின் மூலம் சீரமைக்கப்படும் சிறு பாசனக் குளத்துக்கு பொதுமக்கள், ஆயக்கட்டுதாரா்கள், பயனா் குழுவினா் மதிப்பீட்டுத் தொகையில் 10 சதவீதம் பங்குத் தொகையாக செலுத்தி, தங்களது பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும்.

சிறு பாசனக் குளங்களை சீரமைக்கும் போது, பாசனக் குளத்துக்கு தண்ணீா் வரும் கட்டமைப்பு, குளத்தில் உள்ள மதகுகள், உபரிநீா் வெளியேறும் கட்டமைப்புகளை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், மறு சீரமைப்புச் செய்து கொள்ளலாம் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பெ.திலவதி, உதவித் திட்ட அலுவலா் கே.முத்துப்பாண்டி, வட்டாட்சியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.