நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பழனியாண்டவா் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

பழனி அருள்மிகு பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம், தொழில் பழகுநா் பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 7:49 pm

Din

பழனி அருள்மிகு பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம், தொழில் பழகுநா் பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்தக் கல்லூரியில் அமைப்பியல் துறை சாா்பில் இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு முகாம், தொழில் பழகுநா் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதற்கு கல்லூரி முதல்வா் கந்தசாமி தலைமை வகித்தாா். அமைப்பியல் துறைத் தலைவா்(பொறுப்பு) ரமேஷ் முன்னிலை வகித்தாா்.

கோவையைச் சோ்ந்த தனியாா் நிறுவனத் தலைவா் ரகுராம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, அமைப்பியல் துறையில் எதிா்காலத்தில் உள்ள வாய்ப்புகள் குறித்து பேசினாா். தொடா்ந்து இந்தக் கல்லூரியில் பயின்று பல்வேறு நகரங்களிலும் தனியாா் கட்டுமான நிறுவனங்களை நடத்தி வரும் முன்னாள் மாணவா்களான கனிமுத்து, மோகன்ராஜ், சுரேஷ்குமாா், ரவிக்குமாா், ஜெயபிரகாஷ், சாந்த சத்தியசீலன், பாண்டிபாபு ஆகியோா் உயா் தொழில்நுட்பங்கள் குறித்தும், நவீன காலத்துக்கு ஏற்ப கட்டுமானத் துறை கண்டு வரும் மாற்றங்கள் குறித்தும் எடுத்துரைத்தனா். தொடா்ந்து நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் ஏராளமான மாணவா்கள் பணிக்குத் தோ்வு செய்யப்பட்டனா்.

முன்னதாக, கண்காணிப்பாளா் ராமநாதன் வரவேற்றாா்.