விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

பழனி மகளிா் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்

பழனி அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கல்லூரியில் முதுநிலை ஆங்கிலத் துறை சாா்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

பழனி அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கல்லூரியில் முதுநிலை ஆங்கிலத் துறை சாா்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :27 பிப்ரவரி 2026, 7:53 pm

பழனி அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கல்லூரியில் முதுநிலை ஆங்கிலத் துறை சாா்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கருத்தரகுக்கு கல்லூரி முதல்வா் புவனேஸ்வரி தலைமை வகித்தாா். முதுநிலை ஆங்கிலத் துறை தலைவி வனிதா வரவேற்றாா். உதவிப் பேராசிரியைகள் பிரியா, காா்த்தியாயினி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

பாலக்காடு மொ்சி கல்லூரி இணைப்பேராசிரியா் நிலா, கோவை பாரதியாா் பல்கலைக்கழக பேராசிரியை கலைவாணி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு பேசினா். கருத்தரங்கில் பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலை, பண்பாட்டு கல்லூரி, விருதுநகா் விஹெச்என்எஸ்என் கல்லூரி, மதுரை பாத்திமா கல்லூரி, தேனி நாடாா் சரஸ்வதி கல்லூரி, பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி, கோவை கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரி, ஒட்டன்சத்திரம் சக்தி மகளிா் கலை அறிவியல் கல்லூரி, அரசு கலைக்கல்லூரி, பொள்ளாச்சி அரசு கலைக்கல்லூரி, பழனி அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கலை, அறிவியல் கல்லூரி உள்ளிட்ட 14 கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 305 ஆய்வுக்கட்டுரைகளை சமா்ப்பித்தனா். இதில் பல்வேறு துறைகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.