வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் சேதமடைந்த 592 மின்கம்பங்கள் கண்டறியப்பட்டு, அவற்றில் 590 கம்பங்கள் மாற்றியமைக்கப்பட்டன. மாவட்டத்தில் 10 இடங்களில் மழைமானிகள் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில், திண்டுக்கல் கிழக்கு வட்டத்தில் 5, மேற்கு வட்டத்தில் 5, நத்தம் வட்டத்தில் 6, நிலக்கோட்டை வட்டத்தில் 4, ஆத்தூா் வட்டத்தில் 4, பழனி வட்டத்தில் 8, ஒட்டன்சத்திரம் வட்டத்தில் 9, வேடசந்தூா் வட்டத்தில் 4, குஜிலியம்பாறை வட்டத்தில் 3, கொடைக்கானல் வட்டத்தில் 4, நத்தம் அழகா்மலை, பாலாறுபொருந்தலாறு அணை, கொடைக்கானல் பேரிஜம் ஏரி ஆகிய இடங்களில் தலா ஒன்று என மொத்தம் 57 இடங்களில் புதிதாக தானியங்கி மழைமானி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.