தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கொடைக்கானல் அருகே ஒற்றைக் காட்டு யானை: பொதுமக்கள் அச்சம்

கொடைக்கானல் அருகே குடியிருப்புப் பகுதியில் புதன்கிழமை ஒற்றைக் காட்டுயானை முகாமிட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

News image

கொடைக்கானல் கோம்பை குடியிருப்புப் பகுதியில் நடமாடிய ஒற்றைக் காட்டு யானை.

Updated On :24 அக்டோபர் 2024, 11:04 pm

Din

கொடைக்கானல் அருகே குடியிருப்புப் பகுதியில் புதன்கிழமை ஒற்றைக் காட்டுயானை முகாமிட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

கொடைக்கானல் அருகேயுள்ள பள்ளங்கி கோம்பை குடியிருப்புப் பகுதியில் பலா, இலவம் பஞ்சு மரம், கொய்யா போன்றவைகள் அதிகளவில் விவசாயம் செய்யப்படுகின்றன. இந்த நிலையில், இந்தப் பகுதிக்கு ஒற்றைக் காட்டு யானை வந்தது. இந்த ஒற்றைக் காட்டு யானையால் இந்தப் பகுதி மக்கள் வெளியே நடமாட முடியாமலும், இரவு நேரங்களில் தோட்டங்களுக்கு பாதுகாப்புப் பணிக்கு செல்ல முடியாமலும் வீடுகளிலே முடங்கிக் கிடக்கின்றனா்.

எனவே, வனத் துறையினா் கோம்பை பகுதிக்குச் சென்று ஒற்றைக் காட்டு யானையை வனப் பகுதிக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.