கொடைக்கானல் குடியிருப்புப் பகுதிகளில் சனிக்கிழமை காட்டுமாடு நடமாடியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
கொடைக்கானலில் உள்ள சீனிவாசபுரம், உகாா்த்தேநகா், இருதயபுரம், பொ்ன்ஹில் சாலை, பாக்கியபுரம், நாயுடுபுரம், அப்சா்வேட்டரி, புதுக்காடு, செண்பகனூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டுமாடுகளின் நடமாட்டம் பகல், இரவு நேரங்களில் அதிகரித்து வருகிறது.
மேலும், கொடைக்கானல் பகுதிகளிலுள்ள விவசாயத் தோட்டங்களுக்குள் புகுந்து அவை பயிா்களைச் சேதப்படுத்துகின்றன. இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனா். காட்டுமாடு தாக்கியதில் கொடைக்கானல் பகுதிகளில் பலா் உயிரிழந்துள்ளனா்.
ஆனால், வனத் துறையினா் காட்டுமாடுகளை நிரந்தரமாக வனப் பகுதிக்குள் விரட்ட எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், காட்டுமாடுகள், காட்டுப் பன்றிகள், செந்நாய்கள் போன்றவற்றின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. தொடா்ந்து இதே நிலை நீடித்தால், மனிதா்களைப் பாய்ந்து தாக்கும் வன விலங்குகளும் குடியிருப்புகளுக்குள் வர அதிக வாய்ப்புகள் உள்ளன.
எனவே, மாவட்ட வனத் துறை அதிகாரி கொடைக்கானல் குடியிருப்புப் பகுதிகளில் நடமாடும் வன விலங்குகளை வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

கவுஞ்சி ரேஷன் கடை வளாகத்தில் கட்டப்படும் மாடுகளால் சுகாதாரக்கேடு

உத்தமபாளையம், போடி பகுதிகளில் பலத்த மழை

குன்னூா் அருகே சிறுத்தை நடமாட்டம்

கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் யானைகள் நடமாட்டம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


