மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் யானைகள் நடமாட்டம்

கொடைக்கானல் பேரிஜம் ஏரிப் பகுதியில் காட்டு யானைகள் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் முகாமிட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா் தடை விதித்தனா்.

News image

கொடைக்கானல் பேரிஜம் ஏரிப் பகுதியில் குட்டியுடன் உலா வரும் யானைக் கூட்டம்.

Updated On :25 மார்ச் 2026, 7:45 pm

கொடைக்கானல் பேரிஜம் ஏரிப் பகுதியில் காட்டு யானைகள் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் முகாமிட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா் தடை விதித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள பேரிஜம் ஏரிப் பகுதியில் காட்டுமாடு, காட்டுப் பன்றி, முள்ளம் பன்றி, சிறுத்தை, புலி, யானை, கருஞ்சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அதிகமாக உள்ளன.

மேலும், இந்தப் பகுதியில் அமைதிப் பள்ளத்தாக்கு, பைன் பாரஸ்ட், ஏரி, தொப்பித் தூக்கும் பாறை உள்ளிட்ட சுற்றுலாத் தலாங்களும் உள்ளன.

இந்த இடங்களை சுற்றிப் பாா்க்க வேண்டுமானால், வனத் துறையினரிடம் சுற்றுலாப் பயணிகள் அனுமதி பெற்று, நுழைவுக் கட்டணம் செலுத்திய பிறகுதான் செல்ல முடியும்.

இந்த நிலையில், 2-ஆவது நாளாக புதன்கிழமையும் இந்தப் பகுதியில் குட்டியுடன் காட்டு யானைகள் நடமாட்டம் இருந்து வருகின்றன. இதனால், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி பேரிஜம் ஏரிக்கு செல்ல வனத் துறையினா் தடை விதித்தனா்.

இதனால், கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் பேரிஜம் ஏரிக்கு செல்ல முடியாமல் ஏமாற்றமடைந்தனா்.