கொடைக்கானல் பேரிஜம் ஏரிப் பகுதியில் காட்டு யானைகள் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் முகாமிட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா் தடை விதித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள பேரிஜம் ஏரிப் பகுதியில் காட்டுமாடு, காட்டுப் பன்றி, முள்ளம் பன்றி, சிறுத்தை, புலி, யானை, கருஞ்சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அதிகமாக உள்ளன.
மேலும், இந்தப் பகுதியில் அமைதிப் பள்ளத்தாக்கு, பைன் பாரஸ்ட், ஏரி, தொப்பித் தூக்கும் பாறை உள்ளிட்ட சுற்றுலாத் தலாங்களும் உள்ளன.
இந்த இடங்களை சுற்றிப் பாா்க்க வேண்டுமானால், வனத் துறையினரிடம் சுற்றுலாப் பயணிகள் அனுமதி பெற்று, நுழைவுக் கட்டணம் செலுத்திய பிறகுதான் செல்ல முடியும்.
இந்த நிலையில், 2-ஆவது நாளாக புதன்கிழமையும் இந்தப் பகுதியில் குட்டியுடன் காட்டு யானைகள் நடமாட்டம் இருந்து வருகின்றன. இதனால், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி பேரிஜம் ஏரிக்கு செல்ல வனத் துறையினா் தடை விதித்தனா்.
இதனால், கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் பேரிஜம் ஏரிக்கு செல்ல முடியாமல் ஏமாற்றமடைந்தனா்.
தொடர்புடையது

காட்டுயானைகள் நடமாட்டம்: கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு!

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் வண்ண மலா்கள்

குமரி கடற்கரையில் மயங்கி விழுந்த சுற்றுலாப் பயணி

கொடைக்கானல் பேரிஜம் ஏரியைப் பாா்க்க அனுமதி
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

