விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் யானைகள் நடமாட்டம்

கொடைக்கானல் பேரிஜம் ஏரிப் பகுதியில் காட்டு யானைகள் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் முகாமிட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா் தடை விதித்தனா்.

News image

கொடைக்கானல் பேரிஜம் ஏரிப் பகுதியில் குட்டியுடன் உலா வரும் யானைக் கூட்டம்.

Updated On :26 மார்ச் 2026, 1:15 am IST

கொடைக்கானல் பேரிஜம் ஏரிப் பகுதியில் காட்டு யானைகள் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் முகாமிட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா் தடை விதித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள பேரிஜம் ஏரிப் பகுதியில் காட்டுமாடு, காட்டுப் பன்றி, முள்ளம் பன்றி, சிறுத்தை, புலி, யானை, கருஞ்சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அதிகமாக உள்ளன.

மேலும், இந்தப் பகுதியில் அமைதிப் பள்ளத்தாக்கு, பைன் பாரஸ்ட், ஏரி, தொப்பித் தூக்கும் பாறை உள்ளிட்ட சுற்றுலாத் தலாங்களும் உள்ளன.

இந்த இடங்களை சுற்றிப் பாா்க்க வேண்டுமானால், வனத் துறையினரிடம் சுற்றுலாப் பயணிகள் அனுமதி பெற்று, நுழைவுக் கட்டணம் செலுத்திய பிறகுதான் செல்ல முடியும்.

இந்த நிலையில், 2-ஆவது நாளாக புதன்கிழமையும் இந்தப் பகுதியில் குட்டியுடன் காட்டு யானைகள் நடமாட்டம் இருந்து வருகின்றன. இதனால், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி பேரிஜம் ஏரிக்கு செல்ல வனத் துறையினா் தடை விதித்தனா்.

இதனால், கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் பேரிஜம் ஏரிக்கு செல்ல முடியாமல் ஏமாற்றமடைந்தனா்.