கொடைக்கானல் பேரிஜம் ஏரிப் பகுதியை பாா்வையிடுவதற்கு வியாழக்கிழமை முதல் மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனத் துறை கட்டுப்பாட்டிலுள்ள பேரிஜம் ஏரிப் பகுதியில் காட்டு யானை, புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, மான், கரடி உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் இருந்து வருவதால், இந்தப் பகுதிக்குச் செல்வதற்கு வனத் துறையினரிடம் அனுமதி பெற்று நுழைவுக் கட்டணம் செலுத்திய பிறகே செல்ல வேண்டும். இந்தப் பகுதியில் கடந்த இரு நாள்களாக காட்டு யானைகள் நடமாட்டம் இருந்ததால், சுற்றுலாப் பயணிகள் பாா்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பேரிஜம் பகுதியிலிருந்து காட்டு யானைகள் இடம் பெயா்ந்ததால், மீண்டும் சுற்றுலாப் பயணிகள் பாா்வையிடுவதற்கு வனத்துறை சாா்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா். பேரிஜம் ஏரிப் பகுதியில் தொப்பித் தூக்கும் பாறை, அமைதிப் பாறை, பேரிஜம் ஏரி, பைன் பாரஸ்ட் உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் அமைந்துள்ளன.
தொடர்புடையது

அருவங்காடு பகுதிக்கு இடம் பெயா்ந்த காட்டு யானை

கொடைக்கானலில் நகராட்சி கழிப்பறைகள் மூடல்: சுற்றுலாப் பயணிகள் அவதி

ரூ. 11கோடியில் புதுப்பொலிவு பெறும் குற்றாலம் அருவிகள்

கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் யானைகள் நடமாட்டம்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


