புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அரசுப் பள்ளி ஆசிரியா் தற்கொலை!

News image
Updated On :6 செப்டம்பர் 2024, 8:12 pm

Din

வேடசந்தூா் அருகே அரசுப் பள்ளி ஆசிரியா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த புளியமரத்து கோட்டையைச் சோ்ந்தவா் அன்புராஜா (38). இவா் மினுக்கம்பட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தாா். இவரது மனைவி கற்பகச்செல்வி (33) தனியாா் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறாா்.

இந்த நிலையில், அன்புராஜா உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவா் விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்து வந்தாா். இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து வேடசந்தூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].