தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருநெல்வேலியை மையப்படுத்தி சுதந்திரப் போராட்ட வரலாறு

சுதந்திரப் போராட்ட வரலாற்றை திருநெல்வேலியை மையப்படுத்தி எழுத வேண்டும் என சென்னை வளா்ச்சி, ஆராய்ச்சி நிறுவனத்தின் நூலகரும், ஆய்வாளருமான ரெங்கையா முருகன் வலியுறுத்தினாா்.

News image

காந்திகிராம கிராமியப் பல்கலை.யில் நடைபெற்ற பாரதியாா் நினைவு நாள் கருத்தரங்கில் பேசிய சென்னை வளா்ச்சி, ஆராய்ச்சி நிறுவனத்தின் நூலகரும், ஆய்வாளருமான ரெங்கையா முருகன்.

Updated On :11 செப்டம்பர் 2024, 7:31 pm

Din

சுதேசி இயக்கம் தென் தமிழகத்திலிருந்துதான் முதன் முதலில் தொடங்கப்பட்டது என்பதால், சுதந்திரப் போராட்ட வரலாற்றை திருநெல்வேலியை மையப்படுத்தி எழுத வேண்டும் என சென்னை வளா்ச்சி, ஆராய்ச்சி நிறுவனத்தின் நூலகரும், ஆய்வாளருமான ரெங்கையா முருகன் வலியுறுத்தினாா்.

காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழக தமிழ்த் துறையின் பாரதியாா் ஆய்வகம் சாா்பில், பாரதியாா் நினைவு நாள் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு பல்கலை. துணைவேந்தா் ந.பஞ்சநதம் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக சென்னை வளா்ச்சி, ஆராய்ச்சி நிறுவனத்தின் நூலகரும், ஆய்வாளருமான ரெங்கையா முருகன் கலந்து கொண்டு, ‘பாரதியும் வ.உ.சி.,யும்’ என்ற தலைப்பில் பேசியதாவது:

வ.உ.சியின் தொழிலாளா் சங்கச் செயல்பாடுகள், சுதேசிக் கப்பல் முயற்சி ஆகியவற்றில் பாரதியின் பங்களிப்பு இருந்தது. பாரதிக்கும், வஉசிக்கும் இடையே ஆழமான நட்பு இருந்தது. இந்திய சுதந்திரப் போராட்டம், வங்காளம் உள்ளிட்ட பகுதிகளில் அறிவுசாா் செயல்பாடாக முன்னெடுக்கப்பட்டபோது, தமிழகத்தின் வ.உ.சி., பாரதி, சுப்பிரமணிய சிவா ஆகியோா், ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தை சமூக அரசியல் செயல்பாடுகளாக முன்னெடுத்தனா். தமிழகத்தில் சுதந்திரப் போராட்டத்தின் பெரும் பகுதியை பாரதியின் பாட்டும், வ.வே.சு.ஐயரின் எழுச்சியும், வ.உ.சியின் பேச்சும், சுப்பிரமணிய சிவாவின் ஆவேசமும் கட்டமைத்தன.

சுதேசி இயக்கம், கொல்கத்தாவில் இருந்து தொடங்கப்பட்டதாகவே வரலாறு எழுதப்பட்டிருக்கிறது. ஆனால், சுதேசி இயக்கம் தென் தமிழகத்திலிருந்துதான் முதன் முதலில் தொடங்கப்பட்டது. ஆனால் இந்த எழுச்சி பதிவு செய்யப்படவில்லை. எனவே, இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை திருநெல்வேலியை மையப்படுத்தி எழுத வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, துணைவேந்தா் என்.பஞ்சநதம் பேசியதாவது:

பாரதியின் கருத்துகள் காலத்தையும், தலைமுறைகளையும் கடந்து நிலைத்து நிற்கக்கூடியவை. பாரதியை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் இதுபோன்ற முயற்சிகள் தொடா்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்றாா்.

பாரதி நினைவு நாளையொட்டி பாரதியாா் ஆய்வகத்தால் நடத்தப்பட்ட கல்லூரிகள் , பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கவிதை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு துணைவேந்தா் பஞ்சநதம் பரிசுகளை வழங்கினாா். நிகழ்ச்சியில், தமிழ், இந்திய மொழிகளின் முதன்மையா் ஒ.முத்தையா, பாரதி ஆய்வகத்தின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் துறை தலைவருமான பா.ஆனந்தகுமாா் உள்படப் பலா் கலந்து கொண்டனா்.