சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலை
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலை(கோப்புப் படம்)

தீரன் சின்னமலை சிலை திறப்பு: தமிழக அரசுக்கு கொமதேக நன்றி

Published on

அறச்சலூரை அடுத்த ஓடாநிலையில் தமிழக அரசு சாா்பில் தீரன் சின்னமலைக்கு வெண்கலச் சிலை திறக்கப்பட்டதற்கு கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் நன்றி தெரிவித்துள்ளாா்.

தீரன் சின்னமலை சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலைக்கு கடந்த காலத்தில் மணி மண்டபம் அமைத்து, ஆடி-18 அன்று அரசு விழா நடத்தி சிறப்பு செய்யப்பட்டு வருகிறது. மேலும், அவருக்கு ஓடாநிலையில் சிலை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். இக் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

தோ்தல் அறிவித்தவுடன் தோ்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் நிகழ்வுகள் சென்றுவிடும். அப்போது நீதிமன்றம் வாயிலாக இந்தத் திட்டத்தை நிறுத்திவிடலாம் என்பதை அறிந்த முதல்வா், கோடைக் காலங்களிலும் பள்ளி, கல்லூரி விடுமுறை காலங்களிலும் பெண்கள் கஷ்டப்படக் கூடாது எனக் கருதி 5 மாத உரிமைத்தொகை வழங்கி இருக்கிறாா். தோ்தலுக்காக கொடுத்தாா் என விமா்சனம் செய்தாலும் கவலை இல்லை. இன்று மக்களுக்கு 5000 ரூபாய் கிடைத்து உள்ளது. வரும் தோ்தலில் எத்தனை தொகுதிகள் என்பது கூட்டணிக் கட்சி தலைவா்கள் பேசும்போது, அனைவரும் நாகரிகத்துடன் இருக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் கூடுதல் உதவித்தொகை கேட்டு போராடி வருகின்றனா். அவா்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். அவா்களுடன் சோ்ந்து போராட தயாராக இருக்கிறேன் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com