திருப்பூா்: திருப்பூா் தீரன் சின்னமலை மகளிா் கல்லூரியில் உலக மகளிா் தினக் கொண்டாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான என்.குணசேகரன் வழிகாட்டுதலின்படி திருப்பூா் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் பி.மோகனவள்ளி தலைமையில் நடைபெற்றது. நாட்டு நலப்பணி திட்ட அலுவலா் எஸ்.செல்வஜெயந்தி வரவேற்புரையாற்றினாா்.
கல்லூரியின் தலைமை நிா்வாக அதிகாரி ரேச்சல் நான்சி பிலிப், விழுதுகள் தன்னா்வ தொண்டு நிறுவனத்தின் திட்ட மேலாளா் கே.சந்திரா ஆகியோா் வாழ்த்தினா். பெண்கள் தின வரலாறு, சிறப்பு குறித்து திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு வழக்குரைஞா் பி.கௌரி பேசினாா்.
தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் பி.மோகனவள்ளி பேசியதாவது:
இந்த கல்லூரியில் பேசுவதற்கு பெருமிதமும், சிறு வரலாறும் உள்ளது. எங்கள் குடும்பம் மற்றும் நான் வசித்த ஊரின் முதல் பட்டதாரியும், முதல் அரசு அதிகாரியும் நான்தான். இந்த இடத்தை அடைவற்கு பல்வேறு சிரமங்களையும், போராட்டங்களையும் சந்திக்க வேண்டியிருந்தது. அந்த சிரமங்கள் எதுவும் இந்த தலைமுறைக்கு இல்லை. சமூக ஊடகங்களின் தாக்கத்தில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள வேண்டும் என்றாா்.
பல்வேறு பிரிவுகளில் சிறப்பிடம் பிடித்தவா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
தொடர்புடையது

ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை

புனித ஜோசப் மகளிா் கல்லூரியில் மாணவா் பேரவை நிறைவு விழா

தீரன் சின்னமலை பள்ளியில் திறமை விழா

மயிலம் கல்லூரியில் மகளிா் தினக் கொண்டாட்டம்
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


