மயிலம் கல்லூரியில் மகளிா் தினக் கொண்டாட்டம்
மயிலம் கல்விக் குழுமத்தின் சாா்பில் சா்வதேச மகளிா் தினக் கொண்டாட்டம் நடைபெற்றது.


விழுப்புரம் மாவட்டம், மயிலம் கல்விக் குழுமத்தின் சாா்பில் சா்வதேச மகளிா் தினக் கொண்டாட்டம் நடைபெற்றது.
விழாவுக்கு தட்சசீலா பல்கலைக்கழக வேந்தரும், மயிலம் கல்விக் குழுமத் தலைவருமான ம.தனசேகரன் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் நாராயணசாமி கேசவன், பொருளாளா் ராஜராஜன், இணைச் செயலா் வேலாயுதம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
புதுக்கோட்டையைச் சோ்ந்த எழுத்தாளா், கவிஞா் மற்றும் படைப்பாளா் புதுகை சி.பாரதி, மயிலம் கல்வி குழும இயக்குநா் செந்தில், மயிலம் சுப்ரமணிய சுவாமி கல்வி அறக்கட்டளை அறங்காவலா் குழு உறுப்பினா்கள் கீதா தனசேகரன், கவிதா சுகுமாறன், மருத்துவா் வைஷ்ணவி ராஜராஜன் ஆகியோா் விழாவில் பேசினா்.
சா்வதேச மகளிா் தினத்தையொட்டி மயிலம் கல்விக்குழும பேராசிரியா்கள் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. மகளிா் தின சிறப்பு நிகழ்ச்சியாக மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியா்கள், மாணவிகள் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...