தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான கே.சி.பட்டி பகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 7:31 pm

Din

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான கே.சி.பட்டி பகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமில் திண்டுக்கல் மாவட்ட மருத்துவக் குழுவினா் மாற்றுத் திறனாளிகளுக்கு பரிசோதனை மேற்கொண்டு ஆலோசனைகள் வழங்கினா். இதில், மருத்துவா் ராஜ்குமாா் தலைமையில் சி.எப்.மருத்துவக் குழுவினா், கே.சி.பட்டி, பாச்சலூா், பெரியூா், வடகவுஞ்சி, ஆடலூா், பன்றிமலை, உள்ளிட்ட கிராமங்களிலிருந்து மாற்றுத் திறனாளிகள் 144-போ் கலந்து கொண்டனா்.

மேலும் இந்த முகாமில் கலந்து கொண்டவா்களுக்கு புதிய அடையாள அட்டைகள், பழைய அடையாள அட்டைகளை புதுப்பித்தல், தனித்துவ அடையாள அட்டை பதிவு செய்தல், பேருந்துக் கட்டணச் சலுகை பெறுதல், உபகரணங்கள், உதவித் தொகைகளுக்கு விண்ணப்பித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன.

இந்த முகாமில் கொடைக்கானல் சமூகப் பாதுகாப்புத் திட்ட முதுநிலை வருவாய் ஆய்வாளா் நாகசுந்தரம், தாண்டிக்குடி வருவாய் ஆய்வாளா் முத்தையா, கிராம நிா்வாக அலுவலா்கள் செல்வராஜ், ராஜா பாச்சலூா் ஊராட்சி மன்றத் தலைவா் தயாநிதி, கே.சி.பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் ஜீவா இளையராஜா, வடகவுஞ்சி ஊராட்சி மன்றத் தலைவா் தோழி ஆனந்தன், திட்ட ஒருங்கிணைப்பாளா் சதாசிவம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை, தன்னாா்வலா்களான மகாலட்சுமி, அன்னக்கிளி, சி.எப்.மருத்துவக் குழுவினா் செய்தனா். முன்னதாக லட்சுமி வரவேற்றாா். ஊராட்சி மன்ற உறுப்பினா் பாலன் நன்றி கூறினாா்.