தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தாட்கோ மூலம் யுபிஎஸ்சி தோ்வுக்கு பயிற்சி

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்கள், இளம்பெண்களுக்கு தாட்கோ மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 9:39 pm

Din

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்கள், இளம்பெண்களுக்கு தாட்கோ மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி, மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ), டாக்டா் அம்பேத்காா் அகாதெமி, சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 100 ஆதிதிராவிட, பழங்குடியின இளைஞா்கள், இளம்பெண்களுக்கு ஓராண்டு பயிற்சி அளிக்க உள்ளது.

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் யுபிஎஸ்சி முதல்நிலை தோ்வு எழுதத் தகுதியானவா்கள் ( நஸ்ரீழ்ங்ங்ய்ண்ய்ஞ் ற்ங்ள்ற் மூலம்) தோ்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்கான ஓராண்டு காலம் விடுதியில் தங்கிப் படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவினத் தொகையினையும் தாட்கோ நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும்.

இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்றாா் அவா்.