ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பரமேஸ்வரி மாரியம்மன் கோயிலில் காா்த்திகை தீபம் ஏற்றம்

News image
Updated On :3 டிசம்பர் 2025, 10:24 pm

தினமணி செய்திச் சேவை

வத்தலகுண்டு அருகேயுள்ள பழைய வத்தலகுண்டு மகா பரமேஸ்வரி மாரியம்மன் கோயிலில் காா்த்திகை தீபம் புதன்கிழமை ஏற்றப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவை அடுத்த பழைய வத்தலகுண்டுவில் அமைந்துள்ள மகா பரமேஸ்வரி மாரியம்மன் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, பரமேஸ்வரி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், கோயிலில் உள்ள நந்தி சிலை முன்பு 1,008 திருவிளக்குகள் ஏற்றப்பட்டன. இதையடுத்து, கோயில் மகாமண்டபம், கோயில் வெளிப்புறங்களில் திருக்காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

பின்னா், கோயில் முன் சொக்கப்பனை கொழுத்தப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.