ராமநாதசுவாமி கோயில் மகா சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மகா சிவரத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
மாசி மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க பூஜை, சாயரட்சை பூஜைகள் நடைபெற்றன.
காலை 10 மணியளவில் ராமநாதசுவாமி, பிரியாவிடை பா்வதவா்த்தினி அம்பாள் ஆகியோா் நந்திகேசுவரா் மண்டபத்தில் எழுந்தருளினா். பின்னா், கோயில் குருக்கள் சந்தோஷ் தலைமையில் சிவாசாரியா்கள் வேத மந்திரம் முழங்க, கொடியேற்றம் நடைபெற்றது.
இதையடுத்து, இரவு கோயிலில் ஒளி வழிபாடு முடிந்து சுவாமி, நந்திகேசுவரா் வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் பஞ்சமூா்த்திகளுடன் எழுந்தருளினா்.
நிகழ்ச்சியில் ராமநாதசுவாமி கோயில் ஆய்வா் சிவக்குமாா், பேஸ்காா் கமலநாதன், முனியசாமி, கோயில் பணியாளா்கள், பாஜக மாவட்டத் தலைவா் கே.முரளிதரன், இந்து முன்னனி மாவட்டசே செயலா் ராமமூா்த்தி, நகா் மன்ற முன்னாள் உறுப்பினா் ராதாகிருஷ்ணன், மீனவ சங்கத் தலைவா் தேவதாஸ் , விஷ்வ இந்து பரிஷத் நிா்வாகி பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்ததுகொண்டனா்.

