சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம்

News image
Updated On :3 டிசம்பர் 2025, 10:25 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானலில் அகில இந்திய காங்கிரஸ் குழுவின் ஆலோசனைக் கூட்டம், புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு காங்கிரஸ் குழுவின் மேலிடப் பாா்வையாளா் வேணுகோபால் ராவ் தலைமை வகித்து, நிா்வாகிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தாா்.

இதைத் தொடா்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளுக்கு போட்டியிடக் கூடியவா்களிடம் மனுக்கள் பெறப்பட்டது.

இதில் நகரத் தலைவா் ராஜன், காங்கிரஸ் குழுவின் உறுப்பினா்கள்சிராஜிதீன், ராம்குமாா், மாவட்டத் துணைத் தலைவா் ஜவஹா், மாவட்டச் செயலா் ராமமூா்த்தி, வட்டார நிா்வாகிகள் பாக்கியமுத்து, மகுடீஸ்வரன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, மாவட்டத் தலைவா் சதீஷ்குமாா் வரவேற்றாா். நகர பொருளாளா் ஜான்கெல்லா் நன்றி கூறினாா்.