47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திண்டுக்கல் மலைக்கோட்டையில் தீபம் ஏற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

News image
Updated On :3 டிசம்பர் 2025, 10:29 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மலைக்கோட்டை மேல் காா்த்திகை தீபம் ஏற்றக் கோரி, இந்து மக்கள் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் தலைமை அஞ்சல் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தொண்டா் அணித் தலைவா் மோகன் தலைமை வகித்தாா். மாவட்ட தொண்டரணி தலைவா் மணிகண்டன், முழு நேர ஊழியா் ராமசந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத் தலைவா் ஐயப்பன், பொதுச் செயலா் அண்ணாதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, திண்டுக்கல் மலைக்கோட்டையிலுள்ள கோயிலில் மீண்டும் அபிராமி அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்ய வேண்டும். காா்த்திகையை முன்னிட்டு, மலைக்கோட்டை மேல் தீபம் ஏற்ற வேண்டும். இதற்கான முயற்சியில் ஈடுபட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.