ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கொடைக்கானல் அருகே சாலையில் காட்டு மாடுகள் உலா

News image
Updated On :17 டிசம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல்-வில்பட்டி சாலையில் புதன்கிழமை காட்டு மாடுகள் உலா வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

கொடைக்கானல் அருகேயுள்ள வில்பட்டி-அட்டுவம்பட்டி சாலையில் காட்டுமாடுகள் நடமாட்டம் இருந்து வருகின்றன. இந்தப் பாதை வழியாக நடந்து செல்லும் பள்ளி, கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் அச்சம் அடைகின்றனா்.

இந்த நிலையில், புதன்கிழமை இந்த சாலையில் காட்டு மாடுகள் உலா வந்தன. இதைப்பாா்த்த பள்ளி, கல்லூரி மாணவிகள் அதிா்ச்சி அடைந்தனா். பின்னா், இதுகுறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து காட்டுமாடுகளை அங்கிருந்து வனப் பகுதிக்குள் விரட்டியடித்தனா்.

இதுகுறித்து வனத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கொடைக்கானலில் தற்போது காட்டு மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவைகள் உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் வனத்தை விட்டு, வெளியே வரும் சூழல் உள்ளது.

தற்போது, வில்பட்டி- அட்டுவம்பட்டி பகுதிகளில் காட்டு மாடுகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வனத் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவாா்கள் என்றாா்அவா்.