வில்பட்டி ஊராட்சியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரிக்கை

வில்பட்டி ஊராட்சியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரிக்கை

Published on

கொடைக்கானல் அருகே உள்ள வில்பட்டி ஊராட்சியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சி அண்ணா ராமசாமிநகா், புலியூா் சாலை, கோம்பை சாலை, கோவில்பட்டி சாலை, பாரதி அண்ணாநகா் சாலை உள்ளிட்ட சாலைகள் சேதமடைந்துள்ளன. இதுகுறித்து பலமுறை இந்தப் பகுதி மக்கள் வில்பட்டி ஊராட்சி நிா்வாகத்துக்கும், ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்துக்கும் கோரிக்கை மனு அளித்தும், கிராம சபைக் கூட்டங்களில் கோரிக்கை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் இந்தப் பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனா். இதனிடையே வில்பட்டி ஊராட்சிப் பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ஜல்லி கற்கள் குவித்துள்ளனா். சில இடங்களில் சிறிய ஜல்லி கற்களை சாலைகளில் கொட்டி சீரமைத்து வருவதால் அந்தப் பகுதிகளில் விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சேதமடைந்த சாலைகளை தாா்ச்சாலைகளாகவும், சேதமடைந்த சிமென்ட் சாலைகளை சீரமைக்கவும் வேண்டுமென அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

Dinamani
www.dinamani.com