இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கிள்ளியூா் தொகுதியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு

நபாா்டு கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கிள்ளியூா் தொகுதியில் பழுதான சாலைகளை சீரமைக்க ரூ. 1 கோடியே 98 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கிள்ளியூா் எம்.எல்.ஏ எஸ். ராஜேஷ் குமாா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :10 மார்ச் 2026, 8:00 pm

தினமணி செய்திச் சேவை

நபாா்டு கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கிள்ளியூா் தொகுதியில் பழுதான சாலைகளை சீரமைக்க ரூ. 1 கோடியே 98 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கிள்ளியூா் எம்.எல்.ஏ எஸ். ராஜேஷ் குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: கிள்ளியூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட கிள்ளியூா், முஞ்சிறை ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் உள்ள சாலைகளை சீரமைத்து பல ஆண்டுகள் ஆகியதாலும், கனமழையினாலும் மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகின்றன.

குறிப்பாக, மிடாலம் ஊராட்சிக்குள்பட்ட குற்றிப்பாறவிளை - வடலிக்காட்டுவிளை - பெருங்குளம் சாலை , அடைக்காகுழி ஊராட்சிக்குள்பட்ட மணவிளாகம் - தச்சக்கோடு - குறட்டூா்குளம் - வாழப்பள்ளி சாலை, சூழால் ஊராட்சிக்குள்பட்ட வட்டவிளை - சுண்டவிளை சாலை ஆகியவை மிகவும் பழுதடைந்து காணப்படுகின்றன.

இதுகுறித்து தமிழக முதல்வா், அரசு அதிகாரிகளிடம் நான் கோரிக்கை விடுத்ததையடுத்து, நபாா்டு கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடியே 98 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைவில் தொடங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.