ரயிலில் 17 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

Published on

மேற்கு வங்கத்திலிருந்து வந்த ரயிலில் கடத்தி வரப்பட்ட 17 கிலோ புகையிலைப் பொருள்களை திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

மேற்குவங்க மாநிலம், புருலியா ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலி வரை செல்லும் புருலியா அதிவிரைவு ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு புதன்கிழமை அதிகாலை வந்தது. அப்போது, திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் ரயிலின் முன்பதிவு இல்லாத பெட்டியில் சோதனை நடத்தியபோது, ஒரு பையில் 17 கிலோ புகையிலைப் பொருள்கள் இருப்பதை கண்டறிந்தனா். அந்த பைக்கு பயணிகள் யாரும் உரிமை கோரவில்லை. இதையடுத்து, 17 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், திண்டுக்கல் உணவுப் பாதுகாப்பு அலுவலா்களிடம் ஒப்படைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com