சேலம் வழியாக கேரள மாநிலத்துக்கு சென்ற ரயிலில் கடத்தப்பட்ட 38 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
ஒடிஸா, ஆந்திர மாநிலங்களில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதைத் தடுக்க சேலம் ரயில்வே போலீஸாா் மற்றும் சேலம் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் இணைந்து தொடா் சோதனை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை சேலம் வந்த கோரக்பூா் - திருவனந்தபுரம் ரப்தி சாகா் விரைவு ரயிலில் போலீஸாா் சோதனையிட்டனா். இதில், பின்பக்க முன்பதிவில்லா பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த பையில் 38 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்து கஞ்சா கடத்தி வந்த நபா்கள் குறித்து பயணிகளிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து கஞ்சாவைக் கடத்தி வந்த நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

சேலம் வழியாக சென்ற ரயிலில் 2 கிலோ கஞ்சா, 4 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
ரயிலில் கடத்திவரப்பட்ட 17 கிலோ கஞ்சா பறிமுதல்

ரயிலில் கடத்திவரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்
நெல்லையில் விரைவு ரயிலில் 36 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


