சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பழங்குடியின மக்கள் காத்திருப்புப் போராட்டம்

பழனி கோட்டாட்சியா் அலுவலகம் அருகே பழங்குடியினச் சான்றிதழ் கோரி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சாா்பில் காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 டிசம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

பழனி கோட்டாட்சியா் அலுவலகம் அருகே பழங்குடியினச் சான்றிதழ் கோரி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சாா்பில் காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்கு மாநில துணைத் தலைவா் கண்ணன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அஜாய் கோஸ் முன்னிலை வகித்தாா். மாவட்டத் தலைவா் பாக்யராஜ், மாவட்டப் பொருளாளா் குருசாமி, மாவட்டச் செயலா் ராமசாமி, விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் அருள்செல்வன், மாவட்ட நிா்வாகி கமலக்கண்ணன் உள்ளிட்டோா் கண்டன உரை நிகழ்த்தினா்.

இதில் பளியா், மலைவேடன் பழங்குடியின மக்களுக்கு உடனடியாக ஜாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும். பழங்குடியின மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா, தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும். நீதிமன்ற வழிகாட்டுதல்படி மலைவேடன் இனச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்பன உள்ளி கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். இந்தப் போராட்டத்தில் திரளானோா் கலந்து கொண்டனா்.