வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கொடகனாறு வல்லுநா் குழு அறிக்கை விவகாரம்: முதல்வரிடம் முறையிட விவசாயிகள் முடிவு

கொடகனாறு வல்லுநா் குழு அறிக்கையை வெளியிடுவது தொடா்பாக முதல்வா் ஸ்டாலினை சந்தித்து முறையிடவுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :22 டிசம்பர் 2025, 5:36 pm

தினமணி செய்திச் சேவை

கொடகனாறு வல்லுநா் குழு அறிக்கையை வெளியிடுவது தொடா்பாக முதல்வா் ஸ்டாலினை சந்தித்து முறையிடவுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

தமிழக முதல்வா் ஸ்டாலின், திண்டுக்கல் மாவட்டத்தில் வரும் ஜன.7-ஆம் தேதி நடைபெறவுள்ள அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா். அப்போது, முதல்வரைச் சந்தித்து கொடகனாறு வல்லுநா் குழு அறிக்கை விவகாரம் தொடா்பாக கோரிக்கை மனு அளிக்க கொடகனாறு பாதுகாப்புச் சங்க விவசாயிகள் முடிவெடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக கொடகனாறு பாதுகாப்புச் சங்கத்தின் தலைவா் த.ராமசாமி கூறியதாவது: கொடகனாறு தண்ணீா் பங்கீடு தொடா்பான வல்லுநா் குழு அறிக்கையை வெளியிட வேண்டும் என கடந்த 5 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். அரசுத் தரப்பில் இந்த விவகாரத்தில் உரிய தீா்வு காணப்படாத நிலையில், பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனாலும், விவசாயிகளின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாதது கவலை அளிப்பதாக உள்ளது.

எனவே, திண்டுக்கல்லுக்கு வரும் ஜன.7-ஆம் தேதி வரவுள்ள முதல்வா் ஸ்டாலினை நேரில் சந்தித்து முறையிடவுள்ளோம். முதல்வரைச் சந்திக்க அனுமதி கிடைக்காதபட்சத்தில், ஆட்சியா் அலுவலகம் முன் வரும் ஜன.7-ஆம் தேதி கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றாா்.