தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

புதுதாராபுரம் சாலையில் மேம்பாலம்: அதிகாரிகள் ஆய்வு

பழனி புதுதாராபுரம் சாலையில் மேம்பாலம் அமைப்பது குறித்து அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

News image
Updated On :30 டிசம்பர் 2025, 1:29 am

தினமணி செய்திச் சேவை

பழனி: பழனி புதுதாராபுரம் சாலையில் மேம்பாலம் அமைப்பது குறித்து அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

பழனி நகருக்கு வரும் அனைத்து சாலைகளிலும் இருப்புப் பாதை கடக்கும் நிலையில் அடிக்கடி கடவுச் சாலைகள் மூடப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. புதுதாராபுரம் சாலையில் கடவுச்சாலை மூடும்போது சுமாா் ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு வாகனங்கள் நிற்கும் நிலை உள்ளது. இந்த நிலையில், மேம்பாலம் அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியிட்டதும் பணிகள் தொடங்கப்பட்டது. இந்த நிலையில், மேம்பாலம் இருவழிச் சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டதால் மேம்பாலப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

இதுகுறித்து தொடா்ந்து பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், திங்கள்கிழமை பழனி கோட்டாட்சியா் கண்ணன், நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளா் பாபுராம் உள்ளிட்டோா் மேம்பாலப் பணிகள் குறித்து ஆய்வில் ஈடுபட்டனா்.