தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

மானூா் ஆற்றுப் பாலம் பகுதியில் தூய்மைப்பணி

News image
மானூா் ஆற்றுப்பாலம் பகுதியில் வெள்ளிக்கிழமை உழவாரப் பணியில் ஈடுபட்ட பழனியாண்டவா் பாதயாத்திரை பக்தா்கள் குழுவினா்.
Updated On :3 ஜனவரி 2025, 9:12 pm

Din

பழனியை அடுத்த மானூா் ஆற்றுப்பாலம் பகுதியில் பழனியாண்டவா் பாதயாத்திரை பக்தா்கள் குழு சாா்பில் சாலைகளை தூய்மைப்படுத்தும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பணியில் ஊராட்சித் தலைவா் ராஜேஸ்வரி முருகேசன், துணைத் தலைவா் ராஜேஸ்வரி வெள்ளியங்கிரி ஆகியோா் முன்னிலையில் பழனியாண்டவா் பக்தா்கள் குழுவைச் சோ்ந்த திரளானோா் ஈடுபட்டனா். அப்போது அந்தப் பகுதியிலிருந்த குப்பைகள், கற்கள் அகற்றப்பட்டு உரக்கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டன.

இதுகுறித்து பழனியாண்டவா் பக்தா்கள் குழு ஒருங்கிணைப்பாளா்கள் ரங்கராஜன், மாடசாமி, துா்க்கீஸ்வரன் ஆகியோா் கூறியதாவது:

பழனி வரும் பாதயாத்திரை பக்தா்களுக்கு பழனியாண்டவா் பாதயாத்திரை பக்தா்கள் குழு சாா்பில் மருத்துவ உதவி, சாலை தூய்மை, குடிநீா், உணவு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்யப்படுகின்றன. மேலும் பாதயாத்திரை பக்தா்கள் இரண்டாயிரம் பேருக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றனா்.