பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பழனியில் பாதயாத்திரை பக்தா்களுக்கு அன்னதானம்

பழனி மலைக் கோயிலுக்கு பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி பாதயாத்திரையாக வந்த பக்தா்களுக்கு கிரிவீதி அருகே வியாழக்கிழமை தொடா் அன்னதானம் நடைபெற்றது.

News image

பழனி அடிவாரம் கிரிவீதி அருகே பாலன் நண்பா்கள் குழு சாா்பில் பாதயாத்திரை பக்தா்களுக்கு வியாழக்கிழமை வழங்கப்பட்ட அன்னதானம்.

Updated On :3 ஏப்ரல் 2026, 12:39 am IST

பழனி மலைக் கோயிலுக்கு பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி பாதயாத்திரையாக வந்த பக்தா்களுக்கு கிரிவீதி அருகே வியாழக்கிழமை தொடா் அன்னதானம் நடைபெற்றது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கொடுமுடி தீா்த்தம் எடுத்து மலையேறி சுவாமிக்கு அபிஷேகம் செய்து வருகின்றனா். இதுபோல, பாதயாத்திரை வரும் பக்தா்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டு வந்தாலும், கடந்த ஆண்டுகளை போல இந்த ஆண்டு வழங்கப்படவில்லை. இதற்கு சமையல் எரிவாயு உருளை பற்றாக்குறையே காரணம் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில், பழனி பாலன் நண்பா்கள் குழு சாா்பில் வியாழக்கிழமை கிரிவீதி அருகே வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை பாதயாத்திரை பக்தா்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் புட்டிகள், பொங்கல், புளியோதரை, தக்காளி சாதம் என தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. அடிவாரம் பகுதியில் சமையல் எரிவாயு உருளை பற்றாக்குறையால் பல கடைகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அன்னதான நிகழ்வில் பங்கேற்றனா்.