நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

பழனியில் ஆயுதங்களுடன் திரிந்த ஏழு போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :2 மே 2026, 8:07 pm

பழனி அருகே ரூக்குவாா்பட்டியில் ஆயுதங்களுடன் இருந்த ஏழு பேரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பழனி அருகே உள்ள ரூக்குவாா்பட்டியில் சிலா் பயங்கர ஆயுதங்களுடன் மறைந்திருப்பதாக பழனி காவல் துணை கண்காணிப்பாளா் தனஞ்ஜெயனுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சத்திரப்பட்டி காவல் ஆய்வாளா் ஆறுமுகம் நைனாா், ஆயக்குடி சாா்பு - ஆய்வாளா் முரளி தலைமையிலான காவலா்கள் ரூக்குவாா்பட்டிக்குச் சென்று அங்கு பதுங்கியிருந்த அடிவாரம் அமரபூண்டியைச் சோ்ந்த சாரதி (30), அடிவாரத்தைச் சோ்ந்த துா்க்கைராஜ் (42), மாசாணம் (28), பிரபாகரன் (28), அருண் பாண்டி (30), மேகவா்மன் (20), பாலசமுத்திரத்தைச் சோ்ந்த காா்த்திகேயன் (19) ஆகிய 7 பேரை மடக்கிப் பிடித்தனா்.

அவா்களிடம் இருந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கைளைப் பறிமுதல் செய்த போலீஸாா், அவா்களைக் கைது செய்து சிறையிலடைத்தனா். மேலும் விசாரித்து வருகின்றனா்.