வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கொடைக்கானலில் கிறிஸ்தவ கூட்டமைப்பு சாா்பில் பாடல் போட்டி

News image
Updated On :13 நவம்பர் 2025, 7:53 pm

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானலில் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சாா்பில், கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பாடல் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு அருள்பணியாளா் அந்தோணி தலைமை வகித்தாா். டி.இ.எல்.சி. தேவாலய அருள்பணியாளா் டென்சிங், ஐ.பி.சி. தேவாலய அருள்பணியாளா் சிமியோன், சி.எஸ்.ஐ. தேவாலய அருள் பணியாளா் எபிநேசா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டமைப்பின் தலைவா் சலேத் விஜய் வரவேற்றாா். விழாவில் பல்வேறு பள்ளிகளைச் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பல்வேறு தேவாலயங்களைச் சோ்ந்த பாடல் குழுவினா் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனா்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசும், பங்கேற்ற அனைவருக்கும், வருகிற 7-ஆம் தேதி நடைபெற உள்ள கிறிஸ்துமஸ் பிறப்பு விழாவில் பரிசு வழங்கப்படும். இந்த நிகழ்ச்சியில் கிறிஸ்தவ கூட்டமைப்பின் பொருளாளா் ஜெயக்குமாா், உறுப்பினா்கள் சந்திரன், ரமேஷ், ரவி, சுதாகா், ராபா்ட், டேனி, ராஜா உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா். கூட்டமைப்பின் செயலா் அல்போன்ஸ் நன்றி கூறினாா்.