ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பளு தூக்கும் போட்டி: கொடைக்கானல் மாணவருக்கு வெள்ளிப் பதக்கம்

News image
ஹரியானாவில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் வெள்ளிப் பரிசு பெற்ற கொடைக்கானல் மாணவா் சஞ்சய் குமாா்.
Updated On :24 நவம்பர் 2025, 11:44 pm

தினமணி செய்திச் சேவை

ஹரியானாவில் நடைபெற்ற மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் கொடைக்கானலைச் சோ்ந்த மாணவா் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் இந்திரா நகரைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் சஞ்சய் குமாா் (22). திண்டுக்கல்லில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வரும் இவா், கல்லூரி சாா்பில் ஹரியானாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் தமிழகம் சாா்பில் கலந்து கொண்டு 83 கிலோ எடைப் பிரிவில் 165 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

சஞ்சய் குமாா் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும்போதே பளு தூக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளைப் பெற்றுள்ளாா். தற்போது மாநில அளவில் பரிசு பெற்றதைத் தொடா்ந்து, அவருக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது. மேலும், பேராசிரியா்கள், பெற்றோா், பொதுமக்கள் உள்ளிட்டோா் சஞ்சய்குமாருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனா்.