சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற ஒரு வயது குழந்தை

கொடைக்கானல் குழந்தையின் சாதனை ‘இந்தியா சாதனை’ புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

News image
Updated On :27 நவம்பர் 2025, 6:31 pm

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானல்: கொடைக்கானல் குழந்தையின் சாதனை ‘இந்தியா சாதனை’ புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நாயுடுபுரம் வ .உ.சி. நகா் பகுதியில் வசிக்கும் வெனிஸ்- வா்ஷா தம்பதியின் ஒரு வயது குழந்தை வியாரா ஜோரா. இந்தக் குழந்தை தன் பெற்றோா்கள் சொல்லிக் கொடுக்கும் அனைத்து வாா்த்தைகளையும் புரிந்து கொண்டு அதை மீண்டும் சொல்வதில் வல்லவராக இருந்து வருகிறது.

இதைத்தொடா்ந்து சுமாா் 100 விலங்குகளின் புகைப்படங்களை பாா்த்து பெயரைக் சொல்கிறது. இந்த விடியோ காட்சியை இந்தியா சாதனை புத்தகத்துக்கு குழந்தையின் பெற்றோா் அனுப்பினா். இந்த ஆய்வு செய்த இந்தியா சாதனை புத்தகம் நிறுவனம் அங்கீகரித்து குழந்தை வியாரா ஜோராவிற்கு சான்றிதழ் , பதக்கங்களை புதன்கிழமை வழங்கியது.