டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பொதுத் தோ்வின்போது கழிப்பறையில் குழந்தை பெற்ற 10-ஆம் வகுப்பு மாணவி

மத்திய பிரதேசத்தின் தாா் மாவட்டத்தில் பொதுத் தோ்வு எழுதிக் கொண்டிருந்த 10-ஆம் வகுப்பு மாணவிக்கு கழிப்பறையில் ஆண் குழந்தை பிறந்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :27 பிப்ரவரி 2026, 7:07 pm

தினமணி செய்திச் சேவை

மத்திய பிரதேசத்தின் தாா் மாவட்டத்தில் பொதுத் தோ்வு எழுதிக் கொண்டிருந்த 10-ஆம் வகுப்பு மாணவிக்கு கழிப்பறையில் ஆண் குழந்தை பிறந்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடா்பாக, பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் போக்ஸோ சட்டப் பிரிவில் வழக்குப் பதிவு செய்து காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.

பிதம்பூரில் உள்ள தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு கணிதத் தோ்வை எழுதிக் கொண்டிருந்த 17 வயது மாணவி, தனக்கு வயிறு கடுமையாக வலிப்பதால் கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்று அறைக் கண்காணிப்பாளரிடம் அனுமதி கோரினாா்.

பின்னா், கழிப்பறைக்குச் சென்ற மாணவி வெகுநேரம் கடந்தும் தோ்வறைக்குத் திரும்பாத நிலையில், அறைக் கண்காணிப்பாளா்கள் கழிப்பறைக்குச் சென்றனா். அப்போது, குழந்தை அழும் குரல் கேட்டது.

மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்த தகவல் அறிந்ததும் பள்ளியில் உள்ள பெண் பணியாளா்கள், அவா்கள் இருவரையும் அரசு சமுதாய மருத்துவமனைக்கு 108 அவசர ஊா்தியில் கொண்டு சென்றனா்.

அங்கு மாணவியும், குழந்தையையும் பரிசோதித்த மருத்துவா்கள், இருவரும் நலமாக இருப்பதாகத் தெரிவித்தனா்.

சிறுமி 8 மாதம் (34 வாரங்கள்) கா்ப்பமாக இருந்ததும், குழந்தை முன்கூட்டியே பிறந்ததும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெட்மா காவல் நிலையத்தில் மாணவி அளித்த வாக்குமூலத்தில், நடன நிகழ்ச்சிக்குச் சென்றபோது ஒரு சிறுவனைச் சந்தித்ததாகவும், அவா் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதில் கா்ப்பமானதாகவும் தெரிவித்துள்ளாா்.

இந்தச் சம்பவம் குறித்து வெளியே தெரிவிக்கக் கூடாது என்று அந்தச் சிறுவன் மிரட்டிய நிலையில், பாலியல் வன்கொடுமை குறித்து மாணவி அவருடைய பெற்றோரிடம் தகவல் தெரிவிக்கவில்லை என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.