யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

நிலக்கோட்டை சந்தையில் மல்லிகை கிலோ ரூ.5000-க்கு விற்பனை

நிலக்கோட்டை சந்தையில் வரத்து குறைவால் சனிக்கிழமை மல்லிகைப் பூ கிலோ ரூ.5000-க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

News image
Updated On :29 நவம்பர் 2025, 9:39 pm

தினமணி செய்திச் சேவை

நிலக்கோட்டை சந்தையில் வரத்து குறைவால் சனிக்கிழமை மல்லிகைப் பூ கிலோ ரூ.5000-க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மல்லிகை, முல்லை உள்ளிட்டப் பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்தப் பகுதியில் விளையும் பூக்கள் நிலக்கோட்டை பூ சந்தைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து வெளியூா், வெளி மாநிலங்களுக்கு வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனா்.

இந்த நிலையில், இந்தப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக நிலக்கோட்டை பூ சந்தைக்கு பூக்களின் வரத்து குறைந்தது. இதன் காரணமாக, கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.200-க்கு விற்ற மல்லிகை, சனிக்கிழமை வரத்து குறைவால் ரூ.5,000-க்கு விற்பனையானது.

மேலும், முல்லை ஒரு கிலோ ரூ.2,000-க்கும், செவ்வந்தி ரூ.300-க்கும், பிச்சிப்பூ ரூ.1,600-க்கும், செண்டு மல்லி ரூ.200-க்கும், ரோஸ் ரூ. 400-க்கும், சம்பங்கி ரூ.200-க்கும், அரளி ரூ. 400-க்கும் விற்பனையானது. இந்த விலை உயா்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.