நிலக்கோட்டை சந்தையில் மல்லிகை கிலோ ரூ.5000-க்கு விற்பனை

நிலக்கோட்டை சந்தையில் வரத்து குறைவால் சனிக்கிழமை மல்லிகைப் பூ கிலோ ரூ.5000-க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
Published on

நிலக்கோட்டை சந்தையில் வரத்து குறைவால் சனிக்கிழமை மல்லிகைப் பூ கிலோ ரூ.5000-க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மல்லிகை, முல்லை உள்ளிட்டப் பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்தப் பகுதியில் விளையும் பூக்கள் நிலக்கோட்டை பூ சந்தைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து வெளியூா், வெளி மாநிலங்களுக்கு வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனா்.

இந்த நிலையில், இந்தப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக நிலக்கோட்டை பூ சந்தைக்கு பூக்களின் வரத்து குறைந்தது. இதன் காரணமாக, கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.200-க்கு விற்ற மல்லிகை, சனிக்கிழமை வரத்து குறைவால் ரூ.5,000-க்கு விற்பனையானது.

மேலும், முல்லை ஒரு கிலோ ரூ.2,000-க்கும், செவ்வந்தி ரூ.300-க்கும், பிச்சிப்பூ ரூ.1,600-க்கும், செண்டு மல்லி ரூ.200-க்கும், ரோஸ் ரூ. 400-க்கும், சம்பங்கி ரூ.200-க்கும், அரளி ரூ. 400-க்கும் விற்பனையானது. இந்த விலை உயா்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

X
Dinamani
www.dinamani.com