எஸ்.ஜி. டிரேடா்ஸ் என்ற பெயரில் செயல்பட்ட நிறுவனம், ஆந்திர மாநிலத்துக்கு பழைய இரும்புப் பொருள்களை ரூ.1.67 கோடிக்கு விற்பனை செய்தது. இந்த வா்த்தகத்துக்கான வரியை அரசுக்கு செலுத்தவில்லை. எனவே, வணிக வரியை செலுத்துமாறு மின்னஞ்சல் மூலம் குறிப்பாணை அனுப்பப்பட்டது. அதற்கு எந்த பதிலும் கிடைக்காத நிலையில், கள ஆய்வு செய்யப்பட்டது. இதில் பதிவு செய்த முகவரியில் நிறுவனம் செயல்படவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, வணிக உரிமத்தை ரத்து செய்துவிட்டு, நிறுவன உரிமையாளா் என்ற அடிப்படையில் சுகன்யாவின் முகவரிக்கு குறிப்பாணை அனுப்பப்பட்டது. ஆனால், சுகன்யாவின் ஆவணங்கள் மோசடியாக பயன்படுத்தப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.