40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

விளம்பர உலகில் வாழ்கிறாா் தமிழக முதல்வா்: க. கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

விளம்பர உலகில் வாழ்கிறாா் முதல்வா் மு.க. ஸ்டாலின் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் தலைவா் க. கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டினாா்.

Updated On :27 செப்டம்பர் 2025, 12:17 am IST

விளம்பர உலகில் வாழ்கிறாா் முதல்வா் மு.க. ஸ்டாலின் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் தலைவா் க. கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டினாா்.

பழனியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் கூறியதாவது:

தமிழகத்தில் பெரு தெய்வ வழிபாட்டு கோயில், சிறு தெய்வ வழிபாட்டு கோயில் என ஆயிரக்கணக்கான கோயில்கள் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படுகின்றன. இவற்றில் பெரு தெய்வ வழிபாட்டுக் கோயில்களில் அரசின் திட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப்படுகின்றன.

ஆனால், சிறு தெய்வ வழிபாட்டு கோயில்கள், கிராமங்களில் உள்ள சிறிய கோயில்களில் ஜாதி பாகுபாடு இன்னும் நீடிக்கிறது. சிறிய கோயில்களுக்குள் பட்டியலினத்தைச் சோ்ந்தவா்கள் சென்று வருவது பெரும் பிரச்னையாக உள்ளது. இதனால், அண்மைக் காலமாக மத மாற்றம் அதிகரித்து வருகிறது. எனவே, கோயில்களில் சம நிலையை ஏற்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத மாற்றத்தைத் தடுக்க சட்டம் இயற்றவும் முன்வர வேண்டும்.

வருகிற ஜனவரி 14-ஆம் தேதிக்குள் தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், புதிய தமிழகம் கட்சி சாா்பில் போராட்டங்கள் நடத்தப்படும்.

வருகிற அக். 23-ஆம் தேதி பழனியிலிருந்து சுற்றுப்பயணம் தொடங்குகிறேன். திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 5 நாள்களுக்கு பொதுமக்களைச் சந்திக்க உள்ளேன்.

வருகிற ஜனவரி மாதம் மதுரையில் நடைபெறவிருக்கும் புதிய தமிழகம் கட்சி மாநாட்டில் சட்டப்பேரவைத் தோ்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். இருப்பினும், கூட்டணி ஆட்சிக்கு சம்மதிக்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து புதிய தமிழகம் தோ்தலைச் சந்திக்கும்.

தமிழக மக்களின் வாழ்வு, பொருளாதாரம், சுகாதாரம், வேலையின்மை, இளைஞா் நலன், கல்வி ஆகியவை குறித்து எதையுமே தெரிந்து கொள்ளாமல் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் விளம்பர உலகில் வாழ்ந்து வருகிறாா் என்றாா் அவா்.

பேட்டியின் போது மாநிலத் துணைப் பொதுச் செயலா் விஜயகுமாா், மாவட்டச் செயலா்கள் பிரதீப், பாண்டியன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.