தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

பழனி திருஆவினன்குடி கோயிலில் ஊடல் வைபவம்

பழனி திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக முத்துக்குமாரசுவாமி, தெய்வானை ஊடல் வைபவம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக ஊடல் வைபவத்தில் தெய்வானையிடம் தூது பாடல்களைப் பாடி சமாதானம் செய்த நாகராஜ் சுவாமிகள்.

Updated On :4 ஏப்ரல் 2026, 6:36 pm

பழனி திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக முத்துக்குமாரசுவாமி, தெய்வானை ஊடல் வைபவம் சனிக்கிழமை நடைபெற்றது.

பழனி அடிவாரம் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த மாதம் 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவையொட்டி, கடந்த செவ்வாய்க்கிழமை வெள்ளித் தேரோட்டமும், திருக்கல்யாணமும், புதன்கிழமை பங்குனி உத்திரத் தேரோட்டமும் நடைபெற்றது.

ஊடல் வைபவம்:

சனிக்கிழமை நிறைவு நாள் நிகழ்ச்சியாக முத்துக்குமாரசுவாமிக்கும், தெய்வானை அம்மனுக்கும் ஊடல் வைபவம் நடைபெற்றது.

சந்நிதி வீதி, கிரிவீதி உலா எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி, வள்ளியை திருமணம் செய்து கொண்டாா். இதனால் கோபமடைந்த தெய்வானை அம்மன், அவரிடமிருந்து பிரிந்து திருஆவினன்குடி கோயிலுக்கு வந்து கதவை அடைத்துக் கொண்டாா். இதையடுத்து, சுவாமி வீரபாகுவை தூது அனுப்பியதும், வீரபாகு தெய்வானை அம்மனை சமாதானம் செய்து கோயில் நடையை திறக்க வைக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

Story image

இந்த நிகழ்வுக்கான சமாதானத் தூது பாடல்களை நாகராஜ் சுவாமிகள் பாடினாா். இதையடுத்து, சமாதானமடைந்த தெய்வானை அம்மன் கோயில் நடை திறந்த பின், கோயிலுக்குள் வந்த முத்துக்குமாரசுவாமியுடன் வள்ளி, தெய்வானை சமேதராக பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இந்த நிகழ்வில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, கண்காணிப்பாளா்கள் அழகா்சாமி, வெங்கடேசன், மணியம் சேகா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.