பழனி திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக முத்துக்குமாரசுவாமி, தெய்வானை ஊடல் வைபவம் சனிக்கிழமை நடைபெற்றது.
பழனி அடிவாரம் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த மாதம் 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவையொட்டி, கடந்த செவ்வாய்க்கிழமை வெள்ளித் தேரோட்டமும், திருக்கல்யாணமும், புதன்கிழமை பங்குனி உத்திரத் தேரோட்டமும் நடைபெற்றது.
ஊடல் வைபவம்:
சனிக்கிழமை நிறைவு நாள் நிகழ்ச்சியாக முத்துக்குமாரசுவாமிக்கும், தெய்வானை அம்மனுக்கும் ஊடல் வைபவம் நடைபெற்றது.
சந்நிதி வீதி, கிரிவீதி உலா எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி, வள்ளியை திருமணம் செய்து கொண்டாா். இதனால் கோபமடைந்த தெய்வானை அம்மன், அவரிடமிருந்து பிரிந்து திருஆவினன்குடி கோயிலுக்கு வந்து கதவை அடைத்துக் கொண்டாா். இதையடுத்து, சுவாமி வீரபாகுவை தூது அனுப்பியதும், வீரபாகு தெய்வானை அம்மனை சமாதானம் செய்து கோயில் நடையை திறக்க வைக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கான சமாதானத் தூது பாடல்களை நாகராஜ் சுவாமிகள் பாடினாா். இதையடுத்து, சமாதானமடைந்த தெய்வானை அம்மன் கோயில் நடை திறந்த பின், கோயிலுக்குள் வந்த முத்துக்குமாரசுவாமியுடன் வள்ளி, தெய்வானை சமேதராக பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இந்த நிகழ்வில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, கண்காணிப்பாளா்கள் அழகா்சாமி, வெங்கடேசன், மணியம் சேகா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

வள்ளி தெய்வானை சமேத சண்முகநாதா் திருக்கல்யாண வைபவம்

பச்சை மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம்

முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா

பழனி பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்! ஏப்.1 -இல் தேரோட்டம்!
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


