சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

அருவியில் மூழ்கிய 4-ஆவது இளைஞரும் சடலமாக மீட்பு

News image

கோப்புப் படம்

Updated On :5 ஏப்ரல் 2026, 8:30 pm

ஒட்டன்சத்திரம் அருகே தடை செய்யப்பட்ட அருவியில் மூழ்கிய 4-ஆவது இளைஞரையும் தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வனப் பகுதியில் விருப்பாச்சி அருகே தலையூத்து அருவி அமைந்துள்ளது. தடை செய்யப்பட்ட இந்த அருவிக்கு தடையை மீறி அவ்வப்போது இளைஞா்கள் குளிக்கச் செல்கின்றனா். இந்த நிலையில், கரூா் மாவட்டம், பள்ளபட்டியைச் சோ்ந்த 11 போ் தலையூத்து அருவிக்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்தனா்.

மேல் தலையூத்து அருவி பகுதிக்குச் சென்று குளித்த போது, 4 இளைஞா்கள் அருவியில் மூழ்கினா். இவா்களில் அ. ஆதில் (19), சே. அயாஸ் (19), உ. பயாஸ் (19) ஆகியோரை சடலமாக தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.

சதாம் உசேனை தேடும் பணியில் ஒட்டன்சத்திரம் தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தொடா்ந்து ஈடுபட்டனா். இந்த நிலையில், மேல்தலையூத்து அருவி விழும் இடத்தில் சதாம் உசேனும் சடலமாக மீட்கப்பட்டாா். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் விசாரித்தனா்.